Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வீரராக்கியத்தில் பஸ்கள் நிற்க பொதுமக்கள் வேண்டுகோள்

வீரராக்கியத்தில் பஸ்கள் நிற்க பொதுமக்கள் வேண்டுகோள்

வீரராக்கியத்தில் பஸ்கள் நிற்க பொதுமக்கள் வேண்டுகோள்

வீரராக்கியத்தில் பஸ்கள் நிற்க பொதுமக்கள் வேண்டுகோள்

ADDED : அக் 02, 2025 01:23 AM


Google News
கரூர்:வீரராக்கியத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் அருகே உள்ள வீரராக்கியத்தில் இருந்து, திருச்சி, கரூருக்கு ஏராளமான பணியாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக ஜவுளி, கொசுவலை, அரசு பணிகளுக்கு தினமும் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள, பஸ் ஸ்டாப்பில் கரூர் மற்றும் திருச்சியில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை.

சில தனியார் மற்றும் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் காலையில் வேலைக்கு செல்வும், மாலையில் வீடு திரும்பவும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. காலை நேரங்களில் கிடைக்கும் பஸ்களில் தொங்கியபடி செல்ல வேண்டி உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us