Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஷா நகரில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஷா நகரில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஷா நகரில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஷா நகரில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ADDED : அக் 05, 2025 01:11 AM


Google News
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஷாநகர் கார்னர் பகுதி உள்ளது. இங்கிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்களில் வேகமாக செல்லும் போது தடுமாறுகின்றனர்.

அரசு, தனியார் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளதால் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் போது, அச்சப்படுகின்றனர். இதே போல வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால், பயத்துடனேயே சாலையை கடக்கின்றனர்.

எனவே மாணவ, மாணவியர், வயதானவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நலன் கருதி, ஷா நகர் கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் மற்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us