Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று அபாயம்

பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று அபாயம்

பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று அபாயம்

பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று அபாயம்

ADDED : செப் 28, 2025 08:46 AM


Google News
கரூர் : கரூர் அருகேயுள்ள செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கரூர் மாவட்டம், செட்டிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள, தடுப்பணையில் இருந்து பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன் மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி ஆகிய பகுதிகள், வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இதில், செல்லாண்டிபாளையம் வழியாக செல்லும் வாய்க்கால், பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. அதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நிரம்பி கிடக்கின்றன.

கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. வாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, வாய்க்காலில் உள்ள திடக்கழிவுகளை அகற்றி துார்வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us