Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காலி மனையில் குளம் போல் கழிவுநீர் தேங்குவதால் தொற்று பரவும் அபாயம்

காலி மனையில் குளம் போல் கழிவுநீர் தேங்குவதால் தொற்று பரவும் அபாயம்

காலி மனையில் குளம் போல் கழிவுநீர் தேங்குவதால் தொற்று பரவும் அபாயம்

காலி மனையில் குளம் போல் கழிவுநீர் தேங்குவதால் தொற்று பரவும் அபாயம்

ADDED : டிச 05, 2025 10:59 AM


Google News
கரூர்: காலி மனையில் குளம் போல் கழிவுநீர் தேங்கி இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்-பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பல்வேறு இடங்-களில் காலி மனைகள் உள்ளன. வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள காலி மனைகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேற, சாக்-கடை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. வீடு-களில் கட்டுமான பணிகள் நடக்கும் போது, மணல் போன்ற பொருட்களால் வாய்க்கால் முற்-றிலும் மூடிக் கிடக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை காலத்தில் காலி மனையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேங்கிய நீரால் வீடுகளின் சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு, விழும் நிலை உள்ளது. இது குறித்து நக-ராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவ-டிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us