Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 2ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை

2ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை

2ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை

2ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை

ADDED : அக் 10, 2025 01:04 AM


Google News
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நிலுவையிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடந்தது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி விசாரணை மேற்கொண்டார். அப்போது, 31 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொது தகவல் அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, மனுதாரர்கள் கோரும் தகவல் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது இல்லை என்றால், 5 நாட்களில் உரிய தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் சார்ந்த தகவல் என்றால், 30 நாட்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலர், அவரது பெயர் மற்றும் கையொப்பம், பொது தகவல் அலுவலரின் சீல் கட்டாயம் இட வேண்டும்.

மனுதாரர்களுக்கு மேல் முறையீட்டு அலுவலர் பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட வேண்டும். மனுதாரருக்கு தேவையான உதவிகளை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் திசை திருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. கட்டாயம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை பிரத்யேகமாக உள்ள தனிப்பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என, ஆணையர் இளம்பரிதி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us