/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
ADDED : செப் 26, 2025 01:43 AM
கரூர்,புகழூர் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும், ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், ஜேடர்பாளையம் அணைக்கட்டில் இருந்து பிரியும் புகழூர் வாய்க்காலானது, 42 கி.மீ. தொலைவு கடந்து கரூர் மாவட்டம் புகழூரை வந்தடைகிறது.
புகழூர், வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரிக்கரையோரம் பயிரிடப்படும் வெற்றிலை, கோரை செடிகளுக்கு உயிர் நாடியாக புகழூர் வாய்க்கால் உள்ளது.
வாய்க்காலில் தற்போது ஆங்காங்கே ஆகாயத்தாமரை செடிகள் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமித்து, நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் வேரூன்றி காணப்படுகின்றன.மழை தொடங்குவதற்குள், ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றுவதோடு வாய்க்காலையும் துார்வாரிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.