ADDED : ஜூன் 17, 2025 01:51 AM
கரூர், கரூரில், மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஒந்தமாந்ததபட்டியை சேர்ந்த மருதை என்பவரது மனைவி ஜென்சி, 37. இவர் கடந்த, 10ல் கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றுள்ளார்.
பிறகு, ஜென்சி வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் மருதை, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.