Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புரட்டாசி சஷ்டியையொட்டிபுகழிமலை கோவிலில் வழிபாடு

புரட்டாசி சஷ்டியையொட்டிபுகழிமலை கோவிலில் வழிபாடு

புரட்டாசி சஷ்டியையொட்டிபுகழிமலை கோவிலில் வழிபாடு

புரட்டாசி சஷ்டியையொட்டிபுகழிமலை கோவிலில் வழிபாடு

ADDED : செப் 29, 2025 02:25 AM


Google News
கரூர்;புரட்டாசி சஷ்டியையொட்டி, நேற்று புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு, புரட்டாசி மாத சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சன ம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பூக்கள் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல், நன்செய்புகழூர், அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us