Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'தமிழக அரசின் திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

'தமிழக அரசின் திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

'தமிழக அரசின் திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

'தமிழக அரசின் திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

ADDED : ஜன 08, 2025 03:01 AM


Google News
'தமிழக அரசின் திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

கரூர், :தமிழக அரசின், திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சார்பில், திருநங்கையர் விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள், தாங்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளுக்கு விருது, ஒரு லட்சம் ரூபாய்- காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது. awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, திருநங்கைகள் அரசு உதவி பெறாமல், தாமாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.குறைந்தது ஐந்து திருநங்கைகளுக்காவது, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கரூர் என்ற முகவரியில் நேரில் அல்லது 04324-255009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us