Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

ADDED : அக் 22, 2025 07:47 PM


Google News
சூளகிரி: கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே பேகூரை சேர்ந்தவர் முகம்மது மிலன், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அந்திவாடியிலுள்ள சர்ச்சில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பூனப்பள்ளி - ஆனைக்கல் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரி அருகே மடத்துாரை சேர்ந்தவர் சிம்பு, 21. கடந்த, 19ம் தேதி இரவு, 7:45 மணிக்கு, சூளகிரி - கட்டிகானப்பள்ளி சாலையிலுள்ள தேவர்குட்டை முனீஸ்வரர் கோவில் அருகே, டியோ ஸ்கூட்டரில் சென்றார்.

அவ்வழியாக வந்த, 'பஜாஜ் பல்சர்' பைக் மோதி படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us