Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடைபெற்ற 257 ஆண்டு பழமையான தேர்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடைபெற்ற 257 ஆண்டு பழமையான தேர்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடைபெற்ற 257 ஆண்டு பழமையான தேர்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடைபெற்ற 257 ஆண்டு பழமையான தேர்

ADDED : ஜன 23, 2024 10:29 AM


Google News
ஓசூர்: ஓசூரில், 257 ஆண்டுகளாக, தேரோட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டு வந்த மரகதாம்பிகை தேர், இதற்கு மேல் பயன்படுத்தப்படாது என்பதால், சிறப்பு பூஜை செய்து, ஓரமாக பக்தர்கள் நகர்த்தி சென்று விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது, மரகதாம்பிகை அம்மனுக்கு தனியாக தேர் இழுக்கப்படும். இதற்காக கடந்த, 1767 ம் ஆண்டு கட்டப்பட்ட தேரை, கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இது, 257 ஆண்டுகளை கடந்த நிலையில், இத்தேர் சேதமான நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் தேர் கமிட்டி மற்றும் ஊர்மக்கள் சார்பில், 14 அடி உயரம், 28 டன் எடையில் புதிய தேர் செய்யப்பட்டது. தேர் தயார் நிலையில் உள்ளதால், வரும் மார்ச், 25ல் நடக்கும் தேரோட்டத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக நாளை, தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், 257 ஆண்டுகள் பழமையான தேருக்கு நேற்று, வாச்சீஸ்வர குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து, தேர் கமிட்டி தலைவர் மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், தி.மு.க., பகுதி செயலாளர் ராமு, இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் பழைய தேரை நகர்த்தி சென்று, தேர்ப்பேட்டை பகுதியில் நிறுத்தினர்.

இத்தேரை அப்படியே விட்டு, பாழாக்கி விடாமல், மலை மீது கொண்டு சென்று பாதுகாத்து, வரும் தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் பராமரிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us