Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

ADDED : அக் 11, 2025 12:32 AM


Google News
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் மற்றும் நாகொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் ஆகிய, இரு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது, தேன்கனிக்கோட்டையிலிருந்து, பெங்களூருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் தலா, 8 யூனிட் எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றை கொண்டு சென்ற இரு லாரிகளை பறிமுதல் செய்து, மத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை - ஒசூர் சாலையில் உள்ள அடவிசாமிபுரம் சந்திப்பு சாலையில், மல்லசந்திரம் வி.ஏ.ஓ., ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us