Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாற்றுக்கட்சியினர் 300 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் 300 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் 300 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் 300 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : டிச 03, 2025 08:11 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர், 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.

இதில் தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில், ஓ.பி.எஸ்., அணி தொகுதி செயலாளர் மாதேஷ், தே.மு.தி.க., கிளை செயலாளர் முருகன் மற்றும் பா.ம.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வரவேற்றார்.

மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி, கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

* சூளகிரியில் மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில், அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், இளைஞரணி மாநில துணைச்செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அப்பையா, பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us