Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரி மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 57,957 பேர் பயன்

கி.கிரி மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 57,957 பேர் பயன்

கி.கிரி மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 57,957 பேர் பயன்

கி.கிரி மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 57,957 பேர் பயன்

ADDED : ஜன 10, 2024 12:26 PM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம், 57 ஆயிரத்து, 957 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவை பிரிவு மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கடந்த, 2008 செப்., 15ல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2009 செப்.,ல் சேவை துவங்கப்பட்டது. இதில் தற்போது, ஒரு டூவீலர் ஆம்புலன்ஸ், இரண்டு பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் உள்பட, 35 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேவையில் கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பும் எந்த மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெறலாம். விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், 57,957பேர் பயனடைந்துள்ளனர். இதில், மகப்பேறு பிரசவத்திற்காக, 22,712 பேரும், விபத்தில் காயமடைந்த, 15,098 பேரும் பயனடைந்துள்ளனர். ஆம்புலன்ஸ் சேவையின் மூலம், 221 பேருக்கு அவர்கள் வீட்டிலும், ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவமனை செல்லும் வழியில், 89 பேருக்கும் பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ பயிற்சி பெற்ற உதவியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் பெண்களுக்கு பிரசவம் பார்த்து உள்ளனர். 108 அவசரகால ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையம் மூலம் தகவல் பெறப்பட்டு குறிப்பிட்ட இடங்களுக்கு, 15 முதல், 20 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் செல்கிறது. காலதாமதத்தை குறைக்க ஆம்புலன்சில் ஜி.பி.எஸ்., கருவி, ஆண்ட்ராய்டு மொபைல் போன் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இலவச சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us