ADDED : ஜூன் 03, 2025 01:42 AM
பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., பயாஸ் மற்றும் போலீசார், பி.கொல்லப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள சீனப்பா என்பவரது நிலத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்த சிலர் தப்பியோ
டினர். இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். விசாரித்த போது, பி.கொல்லப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 40, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலுாரை சேர்ந்த நாராயணப்பா, 51, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர்.