ADDED : அக் 22, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42, டிரைவர். இவர் கடந்த, 19ல், ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். காலை, 10:30 மணியளவில் பி.திப்பனப்பள்ளி ஏரி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி சென்றது.
படுகாயமடைந்து அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


