Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு விழிப்புணர்வு

தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு விழிப்புணர்வு

தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு விழிப்புணர்வு

தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு விழிப்புணர்வு

ADDED : அக் 12, 2025 02:52 AM


Google News
ஓசூர்: தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்-டப்பள்ளியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு நேற்று துவங்கியது. ஓசூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் நாக விஜயன் தலைமையில், தீயணைப்புத்துறையினர் பொதுமக்க-ளுக்கு தீ தடுப்பு குறித்து எடுத்துரைத்தனர். கார்களில் திடீரென தீப்பிடித்தால், அதை அணைப்பதற்கு காரிலேயே ஒரு சிறிய தீய-ணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர்களில் காஸ் கசிவு இருந்தால், அதை அறிந்து மின்விளக்கு போடக்கூ-டாது. சிலிண்டரில் ரெகுலேட்டரை அணைத்து விட்டு, அதை தனியாக எடுத்து விட்டு, மூடியால் மூட வேண்டும். அதன் பின், சம்பந்தப்பட்ட காஸ் எஜன்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் படகுகள், பரிசல்களில் பயணித்தால், உயிர் காக்கும் உடைகளை அணிய, அறிவுறுத்தினர். * ஊத்தங்கரையில் 'வாங்க கற்றுக்கொள்வோம்' என்ற தலைப்பில், தீ தடுப்பு, பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us