/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு
ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு
ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு
ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு
ADDED : அக் 19, 2025 02:14 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர், காளேகுண்டா ஆகிய பகுதிகளில், மாந-கர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொது-மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.மக்களின் குறைகளை கேட்டறிந்த மேயர் மற்றும் கமிஷனர், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர். மாநகர நல அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் ரவி, கவுன்-சிலர் ஷில்பா சிவக்குமார், தி.மு.க., பகுதி செயலாளர் ராமு, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.


