Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நவராத்திரி விழா நிறைவு: 14 தேர்கள் ஒன்று கூடிய இடத்தில் பக்தர்கள் வழிபாடு

நவராத்திரி விழா நிறைவு: 14 தேர்கள் ஒன்று கூடிய இடத்தில் பக்தர்கள் வழிபாடு

நவராத்திரி விழா நிறைவு: 14 தேர்கள் ஒன்று கூடிய இடத்தில் பக்தர்கள் வழிபாடு

நவராத்திரி விழா நிறைவு: 14 தேர்கள் ஒன்று கூடிய இடத்தில் பக்தர்கள் வழிபாடு

ADDED : அக் 04, 2025 12:48 AM


Google News
கிருஷ்ணகிரி நவராத்திரி நிறைவு விழாவில், 14 கோவில் தேர்கள் ஒன்று கூடிய இடத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 22ல் துவங்கிய நவராத்திரி திருவிழாவையொட்டி, பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதன் நிறைவு விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், பட்டாளம்மன் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞான விநாயகர் கோவில், கல்கத்தா காளிக்கோவில், மேல்தெரு மாரியம்மன் கோவில்களில் இருந்து, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் பவனி சென்றன.

அனைத்து தேர்களும் நேற்று காலை, 7:00 மணிக்கு பழையப்பேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என ஐதீகம் உள்ளதால், இலைகளை பெற கூட்டம் அலைமோதியது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us