Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ADDED : அக் 12, 2025 02:50 AM


Google News
ஓசூர்: திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூர் காந்தி நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகர் கோபி கார்டன் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி-யாற்றி வந்தார்.

இவரும், தொரப்பள்ளி அருகே பென்னாமடம் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த முரளிதரன், 35, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சா-லையில் யம்ஹா ஸ்கூட்டரில் சென்றனர். வினோத்ராஜ் ஓட்-டினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே வரும் போது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வினோத்ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முரளிதரன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us