Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்

பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்

பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்

பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்

ADDED : அக் 16, 2025 01:06 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி பஞ்., மாதேப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 235 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும், 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளிக்கு வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாக, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், கூடுதல் வகுப்பறை கேட்டு, ஆசிரியர்கள் மனு அளித்திருந்தனர். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டு திட்டத்தில், 98.96 லட்சம் ரூபாய் நிதியில், கூடுதலாக, 4 வகுப்பறைகள் கட்டப்படுகிறது. இதற்கான பணியை, அ.தி.மு.க., - எ

ம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சென்னப்பன், ஒன்றிய செயலாளர் சூர்யா, மகளிரணி தலைவி சுகந்தி மாது, முன்னாள் கவுன்சிலர் அருணாசலம், ஜெயராமன், பி.டி.ஏ., தலைவர் பழனி, இணை செயலாளர்கள் கோவிந்தராஜ், பச்சியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us