ADDED : ஜூன் 26, 2024 07:19 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதி வீடுகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை சேகரிக்க பதிவு பெற்ற 6 வாகனங்கள் உள்ளன.
கழிவுகள் திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதி கழிவு சுத்திகரிப்பு மற்றும் உரம் தயாரிப்பு நிலையத்தில் 4 கட்டங்களாக சுத்திகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நேற்று தொட்டியபட்டி விவசாயிக்கு 16 டன் உரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் செய்திருந்தார்.