ADDED : ஜூன் 01, 2024 05:02 AM

பஸ் சேதம்: நால்வர் கைது
மேலுார்: அரசு டவுன் பஸ் மே 25 இரவு புலிப்பட்டி- - மேலுார் இடையே சென்றது. செட்டியார்பட்டி பிரிவு அருகே நான்கு பேர் பஸ் கண்ணாடியை நொறுக்கியும், பெட்ரோல் ஊற்றி இருக்கைக்கு தீயும் வைத்தனர்.
இதுதொடர்பாக புலிப்பட்டி மணிகண்டன் 24, யோகராஜ் 22, வசந்தகுமார் 24, தேனி உத்தமபாளையம் திலீபன்ராஜ் 23, ஆகியோரை இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஐ., முத்துக்குமார், போலீசார் தினேஷ்குமார், அழகு கைது செய்தனர்.
கைதான நால்வரும் திருநெல்வேலியில் தீபக் ராஜா கொலை செய்யப்பட்டதை கண்டித்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.