ADDED : ஜூன் 26, 2024 07:10 AM
திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியம் மொச்சிகுளத்தில் 400க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வேலை தருவதாகவும், அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் நேற்று காலை 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், கள்ளிக்குடி போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.