ADDED : ஜூன் 02, 2024 03:53 AM
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க சங்க கூட்டம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகி மீனாட்சி அருள் விளக்கு ஏற்றினார்.
அகவல் படிக்கப்பட்டது. சாகா கல்வி என்ற தலைப்பில் ராமலிங்கம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நிர்வாகி மகேந்திரன் வரவேற்றார். நிர்வாகி சாந்தி ஜோதி வழிபாடு செய்தார். நிர்வாகிகள் ராஜூ, ஜெயக்குமார், அய்யப்பன் பங்கேற்றனர். உதவி செயலாளர் நல்லுசாமி நன்றி கூறினார்.