ADDED : ஜூன் 15, 2024 06:27 AM
பேரையூர் : பேரையூர் தாலுகா பாப்பையாபுரம் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது.
ஜூன் 4-ல் கொடியேற்றப்பட்டது. கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், மாறு வேடங்களில் பக்தர்கள் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதேபோல் பி கொண்டுரெட்டிபட்டி காளியம்மன் கோயில் திருவிழாவும் 3 நாட்களாக நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசித்தனர். பொங்கல் வைத்தல், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.