/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள் ‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்

சரஸ்வதியை போற்றினால் கல்வி அறிவு பெருகும்
விஜயதசமி நன்னாளில் பள்ளி செல்ல தயாராகும் குழந்தைகள் நெல்மணியில் அனா ஆவன்னா எழுதுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்வியின் அரசியான கலைமகள் ஆசி கிடைத்தால் கல்வி அறிவு பெருகும்.
குழந்தைகளுக்கு கல்வி கண் திறக்கும் தினமலர்
தினமலர் நாளிதழ் சமூக அக்கறையுடன் கல்வி, மாணவர்கள் நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகளுக்கான அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்துகிறது. என் குழந்தைகள்
பெங்களூருவில் இருந்து வந்தோம்
மகன் ரணதீரனுடன் பங்கேற்றேன். நாங்கள் தற்போது பெங்களூருவில் வசிக்கிறோம். ஒரு மாதம் விடுமுறைக்காக மதுரை வந்தோம். என் அத்தை ஹேமா தீவிர தினமலர் வாசகி. அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி குறித்து அவர் எங்களுக்கு தெரிவித்தார். அதற்கேற்ப விடுமுறையை அட்ஜெஸ்ட் செய்து இங்கு வந்துள்ளோம். இதன் மூலம் சரஸ்வதி அருள் கிடைக்க தினமலர் எங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது.
குடும்பத்தோடு பங்கேற்றோம்
என் மகன் துருவனை இந்தாண்டு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தினமலர் நடத்தும் இந்நிகழ்ச்சியை தெரிந்து பதிவு செய்தோம். குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றோம். நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தினமலர் வழங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. அரிச்சுவடி நிகழ்ச்சியை ஆரம்பித்து மந்திரம் சொல்லி விளக்கம் அளித்தது நன்றாக இருந்தது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தினமலர்
தினமலர் நாளிதழை நினைத்து பார்ப்போம்
என் அம்மா கலா மீனாட்சி தினமலர் நாளிதழின் நீண்ட நாள் வாசகி. அவர்தான் இந்நிகழ்ச்சியை தினமலர் நடத்தும் தகவலை தெரிவித்தார். மகள் மோகிதாஸ்ரீயுடன் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றோம். தேவையான பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு அனைவருக்கும் வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தையும் ஆர்வத்துடன் அரிசியில் 'அ'னா எழுதிய தருணம் மறக்க முடியாமல் அமைந்துவிட்டது. கல்வியில் நாளை என் மகள் சாதிக்கும் போது தினமலர் நாளிதழை
சரஸ்வதி அருள் கிட்டியதால் மகிழ்ச்சி
பாரம்பரியமாக விஜயதசமியை கொண்டாடுகிறோம். மகள் ஆனந்த சயனாவுக்காக இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். ஒவ்வொரு குழந்தைகளின் கல்விக்கும் சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். அவரது இருப்பிடமான இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இருந்து அரிச்சுவடியை ஆரம்பித்தது சந்தோஷம். இதற்கு காரணமாக இருந்தது தினமலர். என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர் விரும்பியதை தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. விரும்பியதை படித்து சாதிக்க வேண்டும் என இந்த சன்னதியில் வேண்டிக்கொண்டேன்.
கல்வியே அழியாத செல்வம்
என் மகள் நிரஞ்சனாவுக்காக வந்தேன். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் தான் தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். விரல் பிடித்து 'அ' னா எழுதி, என் மகளின் கல்விப் பயணத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளேன். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நன்றாக இருந்தது.
காத்திருந்து பங்கேற்றோம்
மகள் தீக் ஷிதாஸ்ரீக்காக எப்போது தினமலர் நாளிதழில் விளம்பரம் வரும் என எதிர்பார்த்திருந்து, காத்திருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளின் கல்வி மிக முக்கியம் என ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறோம். இந்நிகழ்ச்சியில் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குறிப்பிட்டு, அர்ச்சகர் பல நல்ல விஷயங்களை எடுத்துரைத்தார். பெற்றோராக நான் என் குழந்தைக்கு ஆசி வழங்கும்போது 'நன்றாக படித்து பெரிய அதிகாரியாக வர வேண்டும்' என மனமுருகி வேண்டிக்கொண்டேன்.


