ADDED : அக் 05, 2025 03:26 AM

சோழவந்தான் : சோழவந்தான் சோலை நகர் மெயின் ரோட்டில் சாக்கடை பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் இவ்வழியேடூவீலர் மட்டும் செல்லும் நிலை இருந்தது.
கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதி கட்டுமான பணிகளுக்கு தடை ஏற்பட்டது.
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பேரூராட்சி அதிகாரிகள் புதிய பாலம் அமைத்தனர்.


