Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குலசேகரபட்டினம் தசராவிழாவில் ஆபாச நடனம் கண்காணிப்புக்குழு அமைக்க கோர்ட் உத்தரவு

குலசேகரபட்டினம் தசராவிழாவில் ஆபாச நடனம் கண்காணிப்புக்குழு அமைக்க கோர்ட் உத்தரவு

குலசேகரபட்டினம் தசராவிழாவில் ஆபாச நடனம் கண்காணிப்புக்குழு அமைக்க கோர்ட் உத்தரவு

குலசேகரபட்டினம் தசராவிழாவில் ஆபாச நடனம் கண்காணிப்புக்குழு அமைக்க கோர்ட் உத்தரவு

ADDED : செப் 25, 2025 03:19 AM


Google News
மதுரை, : துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா கலைவிழாவில் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை கோரிய வழக்கில் கண்காணிப்புக்குழுவினர் வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா விழாவில் பக்தர்கள் குழுவாக பாரம்பரிய நடனங்கள் ஆடிப்பாடி ஊர்கள்தோறும் காணிக்கை வசூல் செய்து கோயிலில் அப்பணத்தை ஒப்படைப்பர். சில ஆண்டுகளாக அதிக பணம் வசூல் செய்யும் நோக்கில் சினிமா, 'டிவி' நடிகைகளை கொண்டு சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களுக்கு நடனம் ஆட வைக்கின்றனர். இதற்கு 2017ல் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

அதை மீறி தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடுவது தொடர்ந்தது. 2022 ல் உயர்நீதிமன்றம், 'டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டுதல்கள் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் பின்பற்றப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

ஆபாசமான மற்றும் அநாகரிகமான நடன நிகழ்ச்சிகள் நடந்தால் தடை செய்ய வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

2023ல் உயர்நீதிமன்றம் ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி தொடர்பான வழக்கில் சில கட்டுப்பாடுகள் விதித்தது.

ஆனால் 2023 மற்றும் 2024 தசரா கலை விழாவில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை. தற்போது தசரா விழா துவங்கியுள்ளது.

அக்.,3 ல் நிறைவடையும். தசரா கலை நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற, நடனமாட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கலை நிகழ்ச்சியில் பங்கேற்போர் மது அருந்தக்கூடாது. நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

கண்காணிப்புக்குழுவை அரசு தரப்பில் அமைக்க வேண்டும். குலசேகரபட்டினம் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், கோயில் செயல் அலுவலர் சார்பில் தலா ஒரு பிரதிநிதி, உள்ளூரை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 6 பேர் குழுவில் இடம் பெற வேண்டும். அவர்கள் கலை விழாவை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அக்.,9 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us