Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ADDED : அக் 12, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
மேலுார் : மேலுாரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பால் சுத்தமில்லாத தண்ணீரை விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலுார் - - அழகர்கோவில் ரோட்டில் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி, கடைகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

5 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் குடிநீர் வீணாகி வருகிறது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: 5 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாய்களில் செம்மண் கலந்து சுத்தம் இல்லாமல் வரும் தண்ணீரை எப்படி பயன்படுத்தவது. நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்புகளை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us