வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் பேரூராட்சி பொது நிதி ரூ.24.50 லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், நகர செயலாளர் ராசாமணி, பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பகுதி செயலாளர் மருது பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் ஜூலான் பானு வரவேற்றார். கவுன்சிலர்கள் துரை சரவணன், அன்புச்செல்வன், பகவதி, ஆறுமுகம் பங்கேற்றனர்.
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் உச்சி மாகாளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்கள் முன் அமைக்கப்பட்ட தகர கூரைகளை அமைச்சர் திறந்து வைத்தார்.


