Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதர் மண்டிய ஓடையால் அச்சம்

புதர் மண்டிய ஓடையால் அச்சம்

புதர் மண்டிய ஓடையால் அச்சம்

புதர் மண்டிய ஓடையால் அச்சம்

ADDED : ஜூன் 18, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
பேரையூர்: பேரையூர் நகர் பகுதியில் செல்லும் நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டும் செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் மண்டியுள்ளது. விஷ ஜந்துகள்நடமாட்டத்தால்குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து வரும் ஓடை பேரையூர் மையப் பகுதியில் சென்றுஇச்சிகுளம், பெரியகுளம் கண்மாய்க்கு செல்கிறது. ஓடையின் இருபுறமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஓடை செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. குப்பையும் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

நீர்வரத்து ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக காணப்படுவதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகி அடிக்கடி வீட்டிற்கும் வந்து செல்வதால்இப்பகுதி மக்கள்அச்சத்தில் வாழ்கின்றனர். நீர்வரத்து ஓடையை துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us