Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்

ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்

ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்

ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்

ADDED : ஜூன் 23, 2025 07:40 AM


Google News

பரப்பியது கந்தன் நாமம்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு நிறைவாக நேற்றிரவு 8:03 மணிக்கு லட்சக்கணக்கானோர் ஒரே அரங்கில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.
மாநாட்டு அரங்கில் 18 இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. திரையை பார்த்து, மேடையில் இருந்தவர்களும், மாநாட்டில் பங்கேற்ற பக்தர்களும் ஒன்றாக சேர்ந்து மனமுருகி கந்த சஷ்டி கவசம் பாடினர். பாடல் மொத்தமாக ஒரே ஸ்வரத்தில் ஒலித்தது.அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள், நின்றிருந்தவர்கள், ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் வீடுகளில் இருப்பவர்கள் என அனைத்து ஹிந்துக்களும் இணைந்து 20 நிமிடம் கந்த சஷ்டி கவசம் பாடினர்.இப்படி நேற்றிரவு ஐந்து லட்சம் குரல்களால் காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்.'ஐந்து லட்சம் பேர் பாடிய இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை பரிசீலனைக்கு அனுப்பப்படும்' என்று ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us