ADDED : அக் 06, 2025 05:49 AM
வாடிப்பட்டி : சமயநல்லுார் போலீஸ் சப்- டிவிஷன் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி.,ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.
வாடிப்பட்டி, அலங்காநல்லுார், நாகமலை புதுக்கோட்டை, சோழவந்தான், சமயநல்லுார், காடுபட்டி, பாலமேடு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட சொத்து, குடும்ப பிரச்னைகள் குறித்து 60 மனுக்கள் சமரச தீர்வு செய்யப்பட்டது.


