ADDED : மே 29, 2025 01:51 AM
மதுரை:மதுரை காந்தி மியூசியம், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரியில்  அமைதி,  விழுமியக் கல்வி குறித்த சர்வதேச  கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் தேன்மொழி வரவேற்றார். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை  வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி பேராசிரியர் கபிலன் துவக்கி வைத்தார். ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், பேராசிரியர்கள் உஷா, வெங்கடேஸ்வரன், மதுரைக் கல்லுாரி இணைப்பேராசிரியர் சிவ சுப்ரமணியன், பெங்களூரு பேராசிரியர்  அபிதா பேகம்,  ஜெர்மன் பேராசிரியர் கிறிஸ்டியன் பார்ட்டல்ப், பேராசிரியை பாண்டீஸ்வரி,  உதவி பேராசிரியர்கள் பெரியசாமி,  கோபி மணிவண்ணன் பேசினர். உதவி பேராசிரியர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.


