Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ADDED : செப் 17, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
பாலமேடு :அலங்காநல்லுார்- - பாலமேடு மெயின் ரோட்டில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.

இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுக்காம்பட்டி, தேவசேரி பிரிவு, கீழச்சின்னணம்பட்டி பிரிவு பகுதிகளில் ரோட்டோரம் பட்டுப்போன நிலையில் காய்ந்த மரங்கள் பல உள்ளன. சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அவை வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. காற்று, மழை நேரங்களில் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுவதால் டூவீலரில் செல்வோர் காயமடைகின்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் பட்டுப்போன மரங்களை அகற்ற வனம், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us