ADDED : ஜூன் 07, 2025 04:50 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாயனேரி கரிசல்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பக்தர்கள் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து காளியம்மன் கோயில் வரை பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதைடுத்து அம்மன் சன்னதி கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர் அதிகளவில் பங்கேற்றனர்.