ADDED : பிப் 11, 2024 12:54 AM

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியின் 21வது பட்டமளிப்பு விழா தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது.
செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில், நிர்வாக உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் பெங்களூரு இஸ்ரோ ஆராய்ச்சி வளாக முன்னாள் ஒருங்கிணைப்பு இயக்குநர் ஜெயந்தி ராஜேஷ் பட்டங்கள் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் பெறும் பட்டம் வாழ்க்கைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும். நமது தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறோம். வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர மாணவர்களின் பட்டம் பயன்பட வேண்டும்'' என்றார்.