Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயிலில் இடம் பிடிக்க பக்தர்களிடையே போட்டோ போட்டி; கந்தசஷ்டி இன்று துவக்கம்

குன்றத்து கோயிலில் இடம் பிடிக்க பக்தர்களிடையே போட்டோ போட்டி; கந்தசஷ்டி இன்று துவக்கம்

குன்றத்து கோயிலில் இடம் பிடிக்க பக்தர்களிடையே போட்டோ போட்டி; கந்தசஷ்டி இன்று துவக்கம்

குன்றத்து கோயிலில் இடம் பிடிக்க பக்தர்களிடையே போட்டோ போட்டி; கந்தசஷ்டி இன்று துவக்கம்

ADDED : அக் 22, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: -: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் இன்று (அக். 22) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.

அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும்.

திருவிழா நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வர். இதற்காக மண்டபத்தில் இடம்பிடிக்க நேற்று பக்தர்களிடையே கடும் போட்டி உருவானது. நேற்று முன் தினம் முதல் கோயில் மண்டபங்களில் பக்தர்கள் போர்வை விரித்தும், சாக்பீஸ்களால் தங்கள் பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடிக்கின்றனர்.

வழக்கமாக தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி துவங்கும். அதனால் தீபாவளியை கொண்டாடி முடித்தவுடன் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்குவர். இந்தாண்டு இன்று சஷ்டி துவங்குவதால் தீபாவளி அன்று இரவு பக்தர்கள் கோயிலில் தங்க நிர்வாகம் அனுமதிக்காததால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து இடம் பிடிக்க துவங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us