Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

ADDED : அக் 17, 2025 02:08 AM


Google News
மதுரை: கள்ளிக்குடி அருகே புளியம்பட்டி ராமராஜ்65. அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வகண்ணன்23. இருவரும் 2021 செப்.,14 ல் ஊர் மந்தையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பங்காளிகள் யாருக்கு அதிகம் உள்ளனர் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ராமராஜை செல்வகண்ணன் தாக்கினார். ஊர்மக்கள் சமாதானம் செய்தனர். ஆத்திரமடைந்த ராமராஜ் அன்று இரவு மந்தையில் துாங்கிக் கொண்டிருந்த செல்வகண்ணனின் தலையில் கல்லை துாக்கிப் போட்டு கொலை செய்தார். வில்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ராமராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us