Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ADDED : செப் 24, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
மதுரை:மதுரையில் ஜவுளிக்கடைகளை குறிவைத்து கொ ள்ளையடித்து வந்த, 35 வழக்குகளில் தொடர்புடைய நபரை போ லீசார் கைது செய்தனர்.

மதுரை, விளக்குத்துாணில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் செப்., 19 இரவு மாடி வழியாக உள்ளே புகுந்த நபர், எட்டு கதவுகளின் பூட்டுகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஒவ்வொரு மாடியிலும் கல்லா பெட்டியில் இருந்த, மொத்தம், 17 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்.

இதே நபர், 20 நாட்களுக்கு முன் மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றிலும் மாடி வழியாக புகுந்து, 8 லட்சம் ரூபாயை திருடி உள்ளார்.

இது தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் விசாரித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குள்ளக்கபாளையத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சுந்தர்சிங் விஜில்குமார், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, தமிழகம் முழுதும் 35 வழக்குகள் உள்ளன.

போலீசார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளிக்கடை உரிமையாளர்கள், வசூலாகும் தொகையை கடையில் வைக்க வேண்டாம். கண்காணிப்பு கேமராக்கள் இரவிலும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். மாடிப்படிகளில் பாதுகாப்பு பலப் படுத்த வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us