Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்

ADDED : அக் 13, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம். அக். 13-

''தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்று முதல் 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' ஆகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

'தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்' என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறிநகரில் கிராம மக்களை சந்திக்க வந்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாங்களும் சுற்றுப்பயணம் தொடங்கி, மக்கள் குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். பணத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கும் தி.மு.க., ஆட்சியை விரைவில் அகற்ற வேண்டும். அதற்கான முகூர்த்த நாள் இன்று குறிக்கப்பட்டு, பிரசாரம் துவக்குகிறோம். தி.மு.க., ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் தவிக்கின்றனர். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அது யாருடைய குற்றம். அரசாங்கத்தின் குற்றம். காவல்துறையின் குற்றம். காவல்துறையை முதல்வர் ஸ்டாலினே கையில் வைத்து இருந்தும், தினமும் படுகொலை, கிட்னி முறைகேடு நடக்கிறது. தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தலைகுனிவான நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி மக்களிடம் பேசக்கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே தான் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் கேட்ட இடத்தை கொடுக்காமல் குறுகலான இடத்தை கொடுத்துள்ளனர்.

கரூரில் சம்பவம் நடந்தபோது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிறார். ரவுடிகள் கையில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். மோசமான நிலையில் அச்சம்பவம் நடந்துள்ளது.

ஜாதித்தலைவர்களின் பெயர் தெருப்பெயராக இருக்க வேண்டியதில்லை என்கின்றனர். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி., பெயரை வைக்க கூடாதா. அனைத்து இடங்களிலும் கருணாநிதி பெயரைத்தான் வைக்க வேண்டுமா.

அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை தோளில் இருந்து இறக்கினால் இன்னும் விரைவாக செல்லலாம் என கருத்து கூறியுள்ளார். தினகரன் எங்கள் கூட்டணியில் இருந்தவர். கூட்டணி என்று வரும் போது ஒவ்வொருவரின் ஐடியாவையும் கேட்டு விட்டு முடிவு செய்ய முடியாது. பழனிசாமி பிரசார கூட்டத்தில் த.வெ.க., கொடி இருந்தது என்றால், தொண்டர்களால் சேர்வதுதானே இயற்கையான கூட்டணி.

வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் டூ வீலர் மோதிய விவகாரத்தில் அக்கட்சித் தலைவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. டூவீலரில் வந்தவர் முறைத்தார். அதனால் அடித்தனர் என்கிறார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிற தலைவர் இப்படி பேசுவது சரியா என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us