Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி

போலீஸ் செய்திகள் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி

போலீஸ் செய்திகள் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி

போலீஸ் செய்திகள் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி

ADDED : மே 24, 2025 03:42 AM


Google News
மதுரை: நகர் ஆயுதப்படை போலீசாக பணியாற்றியவர் மோகன்குமார். கடந்த பிப்.6ல் பணியின்போது எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி இறந்தார். இவரது 2017 பேட்ச் காவலர்களில் 6728 பேர் 'காக்கும் உறவுகள்' என்ற பெயரில் ரூ.22.18 லட்சம் சேகரித்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் பெற்றோருக்கு கமிஷனர் லோகநாதன் மூலம் நேற்று வழங்கினர்.

துணைகமிஷனர் திருமலைக்குமார் உடனிருந்தார். இந்த பேட்ச் போலீசார் பலர் இன்னும் 'காக்கும் உறவுகள்' குழுவில் சேராமல் உள்ளனர். அவர்கள் நகர் ஆயுதப்படை போலீசாரை தொடர்புக்கொள்ளலாம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us