Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் கொள்முதல் செய்ய மறியல்

நெல் கொள்முதல் செய்ய மறியல்

நெல் கொள்முதல் செய்ய மறியல்

நெல் கொள்முதல் செய்ய மறியல்

ADDED : ஜூன் 21, 2025 12:24 AM


Google News
பேரையூர்: பேரையூர் அருகே வகுரணி ஊராட்சி சந்தைபட்டியில் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 3500 மூடைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகளை வாங்க மறுத்து விட்டனர்.

நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். விவசாயிகள் கூறுகையில், ''நெல் மூடை கொள்முதல் செய்யாததால் இப்பகுதியில் பல ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்படாமல் உள்ளது'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us