Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது

ADDED : பிப் 11, 2024 01:00 AM


Google News
சென்னை: 'ரேஷன் கடைகளில், விரல் ரேகை சரிபார்ப்பு பணியை எவ்வித இடையூறு இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இன்றியும் முடிக்க ரேஷன் கடை ஊழியர்களை அறிவுறுத்தவும்' என, கலெக்டர்களுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஆணையர் ஹர் சஹாய் மீனா அனுப்பிய சுற்றறிக்கை விபரம்: ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது; ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது.

விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று, ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us