Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு தீர்வு

நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு தீர்வு

நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு தீர்வு

நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு தீர்வு

ADDED : பிப் 02, 2024 06:16 AM


Google News
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பின்சம்பா மற்றும் கோடை பருவ நெல் பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது.

இப்புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களில் இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி, காய்ந்துவிடும்.

தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


எக்டேருக்கு டிரைக்கோகிரேம்மா கிலோனிஸை (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51வது நாட்களில் எக்டேருக்கு 5 சி.சி. என்ற அளவில் விட வேண்டும்.

தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்கவேண்டும். புல் வகை களைகளை நீக்கி, வரப்புகளை சுத்தமாக வைத்தல் வேண்டும். எக்டேருக்கு வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம், அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் தெளிக்க வேண்டும். தவிர பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கலாம்.

எக்டேருக்கு பாசலான் 35இ.சி.யை 1, 500 மில்லி, குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் இ.சி.யை 1,250 மில்லி, அசிபேட் 75சதவீதம் எஸ்.பி.யை 1கிலோ, அசாடிராக்டின் 0.03 சதவீதத்தை 1,000 மில்லி, கார்போசல்பான் 6 சதவீதத்தை 16.7 கிலோ, கார்டேப்ஹைட்ரோகுளோரைடு 50 சதவீத எஸ்.பி.யை 1 கிலோ, குளோராண்டிரினிலிபுரோல் 18.5 சதவீத எஸ்.சி.யை 150 கிராம், புளுபென்டிமைட் 39.35 சலவீத எஸ்.சி.யை 50 கிராம், தையமீத்தாக்சாம் 25 சதவீத டபுள்யூ.ஜி.யை 100 கிராம், இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை தெளிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது திருநகரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us