Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

ADDED : ஜூன் 10, 2025 01:39 AM


Google News
எழுமலை: எழுமலை மல்லப்புரம்அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்த விவசாயதொழிலாளி சின்னன் 52.

இவர் வேலைக்குச் செல்லும் வழியில் இருந்த தோட்டத்தில் தனியாக இருந்த 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் அதனை கவனித்து சத்தமிட்டு அவரிடம் இருந்து சிறுமியை மீட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசாரிடம் புகார் செய்த தகவல் அறிந்த சின்னன், அந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us