Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் சண்முகார்ச்சனை

குன்றத்தில் சண்முகார்ச்சனை

குன்றத்தில் சண்முகார்ச்சனை

குன்றத்தில் சண்முகார்ச்சனை

ADDED : அக் 24, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 8:30 மணி, காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது.

சஷ்டி திருவிழாவில் அக்.,27 வரை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடக்கிறது. பின்பு சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை படைக்கப்படுகிறது. வழக்கமாக உபயதாரர்கள் மூலம் தினமும் இரண்டு வேளை சண்முகார்ச்சனை நடைபெறும். இந்தாண்டு கூடுதலாக ஒரு வேளை சிறப்பு சண்முகார்ச்சனை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us