ADDED : செப் 20, 2025 04:17 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் சங்கையா, ஊர்காவலன் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிகளுக்கு வாகை மரம் இடையூறாக இருந்தது.
மரத்தை அகற்ற வருவாய், வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மரத்தை அகற்ற அனுமதியளிக்கப்பட்டது.