ADDED : அக் 10, 2025 03:10 AM
மேலுார்: பூதமங்கலத்தில் உள்ள கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரால் ஏராளமான ஏக்கர் பாசனம் பெறும். இக்கால்வாயை நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அவலம் நிலவியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் கால்வாய் உடனே சுத்தம் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


